வியாழன், 24 ஏப்ரல், 2014


முனைவர் மு.வளர்மதி அவர்களின்
 பிறந்த நாள் வாழ்த்துமடல்

தாயே!
மலரின் மணம் நீ!
நிலவின் குளிமை நீ!
கதிரவனின் ஆற்றல் நீ!
நீலக்கடலின் எல்லையில்லா அறிவு நீ!
குணத்தில் அகன்ற வானம் நீ!
மணத்தில் இன்று மலர்ந்த மலரின் வாசம் நீ!
தாழையின் மடல் நீ!
ஏழையின் பசியைத் தீர்க்கும் விண்ணின் மழைத்துளி நீ!
அனுபவத்தின் சுமைதாங்கி நீ!
நல்லறிவின் நல்லாசான் நீ!
போர்ர்க்களமே உம்மை வணங்கும் போராளி நீ!
புகழை விரும்பா புதுமைப் பெண் நீ!
மொழிபெயர்ப்பின் சிகரம் நீ!
அடிமை விலங்கின் திறவுகோல் நீ!
தன்னையே செதுக்கிய சிற்பியின் உளியும் நீ!
பல்லாயிரம் மாணவர்க்கு வழிகாட்டி நீ!
சான்றோரின் தலைமை நீ!
நல் இதயங்கள் வாழ்த்தும் நல்ல மனிதப் பிறவியும் நீ!
மானுடன் போற்றும் மாமேதை நீ!
மாலை மதியம் நீ!
இளவேனில் தென்றலும் நீ!
எங்கள் மனம் பதிந்த வரலாற்றுச் சுவடி நீ!
தடயமில்லா ஈகைக்குணம் கொண்டவள் நீ!
தாகம் தீர்க்கும் நீரும் நீ!
பிறப்பை அறுக்கும் அமிழ்தமும் நீ!
பொறுமையின் உறைவிடம் நீ!
எளிமையின் உதாரணம் நீ!
விருதுகள் விரும்பா விண்வெளி வெளிச்சம் நீ!
புகழை விரும்பா பெரியாரின் மகள் நீ!
தாய்க்கே தாயானவள் நீ!
தந்தையைச் சேயாக்கியவள் நீ!
உற்றாரை காப்பதில் உமையன்னை நீ!
உறவினரை காக்கும் அன்னையும் நீ!

அம்மா!
உன்னிடத்தில் இல்லை
எனும் குறைகளுமுண்டு. ஆம்!
உன்னிடத்தில்  கள்ளமில்லை;
வஞ்சகமில்லை; பொறாமையில்லை;
பிறரை கெடுக்கும் தீய குணமில்லை; பழிபாவமில்லை ;
உன்னை நம்பியவர்க்கு அன்புக்கு பஞ்சமில்லை;
எங்கள் அம்மாவின் ஆயுளில் என்றுமே குறையுமில்லை.
அம்மா!
உம்மை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!
எங்கள்  அம்மா! பல்லாண்டு காலம்
எல்லா நலமும் வளமும் பெற்று
சீரும் சிறப்புடன் பழியில்லா
வாழ்வு வாழ வேண்டும்!

தாயே!
நீ வாழ்ந்தால் பல உயிரினம் வாழும்!
நீ வாழ்ந்தால் அறம் வாழும் பெண்மை வாழும்!
வாழ்க பல்லாண்டு வாழ்க! வாழ்க!
வாழும் காலத்தே
பலரையும் வாழவைக்கும்
தமிழ் அன்னையும் நீயே!

அம்மா!
உம்மால் நாங்கள்
துக்கத்தை மறந்தோம்!
பகையை மறந்தோம்!
சோம்பலை மறந்தோம்!
பகல் கனவை மறந்தோம்!
ஆடம்பரத்தை மறந்தோம்!
ஆரவாரத்தை மறந்தோம்!
ஏற்றத் தாழ்வினை மறந்தோம்!
ஏக்கத்தை மறந்தோம்!
தேவையில்லாததை மறந்தோம்!
நிலையில்லாததை மறந்தோம்!
உம்மால் நிலையானதை உணர்ந்தோம்!.
ஆம். உன்னால்!
தாய்மையின் அன்பை உணர்ந்தோம்!
தகப்பனின் வழிகாட்டியாய் உணர்ந்தோம்!
ஆசிரியரின் தகுதியாய் உம்மை அறிந்தோம்!
தூய நட்பை உணர்ந்தோம்!
எதிர்பாப்பில்லா பாசத்தை உணர்ந்தோம்!
எளிமையை அறிந்தோம்!
நேர்மையை உணர்ந்தோம்!
கடின உழைப்பின் பலனை அறிந்தோம்!
பணிவின் பெருமையை உணர்ந்தோம்!
கனிவான மொழியின் உயர்வை அறிந்தோம்!
எழுத்தின் ஆழத்தை அறிந்தோம்!
ஆய்வின் அருமை அறிந்தோம்!
மனித பிறவியின் காரணத்தை உணர்ந்தோம்!
வாழ்வின் பொருளை உணர்ந்தோம்!
எங்கள் எண்வரின் வாழ்வையும்
தொடங்கி வைத்தாய்!
 உம்மால் நாங்கள் வாழ்வோம்!
 எங்களால் தமிழ்ச் சமுதாயமே வாழும்!
தமிழினமே வாழ துணையாய் இருப்போம்!
தேசத்தை காக்கும் நாங்கள்
உங்கள் மாணவர்கள்
எனும்  பெயரையும்
காப்போம்! காப்போம்!!
நன்றி, அம்மா!
அம்மாவிற்கு
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!

இப்படிக்கு
தங்கள் அன்பு மாணவர்கள்
20, ஏப்ரல், 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக